Friday 24 August 2012

படித்தால் பிடிக்கும் புத்தகங்கள்!



1 . தமிழ் மண்ணே வணக்கம் : ஆனந்த விகடன் வெளியீடு.
துறை சார்ந்த அறிவும் , மக்களின் மீது அக்கறையும் கொண்ட சமூக ஆர்வலர்களின் கட்டுரைத் தொகுப்பு.

2 . மனைவி- விஜயா பதிப்பகம்;    அடியார்; திருமணமான அல்லது திருமணமாகாத இளைஞர்கள் , பெரியவர்கள் என ஆண்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

3. மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்; விஜயா பதிப்பகம்;
    மரபின் மைந்தர்- ம.முத்தையா.
மலையையே நகர்த்தும் ஆற்றல் நம் மனதிற்கு உண்டு என்பதை சுவைபடக் கூறும் நூல்.

4. கதா விலாசம் ; ஆனந்த விகடன் வெளியீடு. எஸ்.ராமகிருஷ்ணன்
மனித மனவிலாசங்களை விரிவாகவும் பயனுள்ள வகையிலும் கூறும் நூல்.

5. அறிவியல் அரட்டை; NCBH வெளியீடு.
ஆசிரியரும் மாணவர்களும் சுற்றுலா செல்லுமிடத்தில் நிகழும் சுவையான அறிவியல் உரையாடல்கள்.

6. நீ நதிபோல் ஓடிக்கொண்டிரு; ஆனந்த விகடன் வெளியீடு; பாரதி பாஸ்கர்.

7. சரயூ- அருணன் ( வசந்தம் பதிப்பகமாக இருக்கலாம்)
உள்ளத்து உணர்ச்சிகளின் சூட்சுமத்தை சரளமாகவும் விரிவாகவும் பேசி இருப்பது ஆசிரியரின் தனித்த ஆற்றல். 

8. பணிப் பண்பாடு; NCBH வெளியீடு. வெ. இறையன்பு;
பத்து ரூபாய்  அதிசயம்! பக்கத்திற்குப் பக்கம் சுவையான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய அறிவுரைப் பெட்டகம்.

9. இலக்கியச் சித்திரங்களும்  கொஞ்சம் சினிமாவும்;
பேரா. கு, ஞானசம்பந்தன் ;
இயல்பான நகைச்சுவையுடன் , இலக்கிய செல்வங்களை வாரி வழங்கும் இனிய நூல்.

10. சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை. விஜயா பதிப்பகம்;  மஞ்சை வசந்தன்.

நம்மைச் சுற்றி நமக்கு நாமே இட்டுக்கொண்ட அறியாமை வேலியை அகற்றும் அறிய தகவல் களஞ்சியம்.
--- புத்தகத் தூதன்-சடகோபன்;

முனைவர் வா.நேரு -தேர்ந்தெடுத்த நூல்கள்.

வாசிப்போர் களம் நண்பர்களுக்கு,
                                                                      பரந்துபட்ட வாசிப்புத்தன்மை கொண்ட நண்பர்கள் உள்ள களம் இது. நூற்றுக்கணக்கான புத்தங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றாலும் படித்து முடித்தபின்பும் , யோசிக்கவும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் தூண்டிய 10 புத்தகங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 

1. Title in Japanese: Totto-chan, the Little Girl at the Window
தமிழில்:டோட்டா-சான், ஜன்னலில் ஒரு சிறுமி
மூல ஆசிரியர்:டெட்சுகோ குரோயாநாகி (Tetsuko Kuroyanagi)
முதற்பதிப்பு: 1996 விலை: ரூ 34.00
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

2.உலகை மாற்றிய புதுப்புனைவுகள் - பகுதி 1 & 2 
 ஆங்கில மூலம் -மீர் நஜாபத் அலி த்மிழாக்கம் -ருத்ர .துளசிதாஸ் 
 முதற்பதிப்பு: 1974 விலை: ரூ 30.00(15+15) 
 வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

3. கீதையின் மறுபக்கம். - கி.வீரமணி, திராவிடன் புத்தக நிலையம் , சென்னை -7

4. கடவுள் ஒரு பொய் நம்பிக்கை - ரிச்சர்டு டாக்கின்ஸ்- தமிழில் கு.வெ.கி. ஆசான்,    திராவிடன் புத்தக நிலையம் - சென்னை -7 

5. ஆத்தங்கரை ஓரம்-நாவல் -  வெ.இறையன்பு ,
   பதிப்பகம்  நியூ செஞ்சுரி புக் கவுஸ், நான்காம் பதிப்பு : 2006 விலை ரூ 55.00

6. குறடு -தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் -     அழகிய பெரியவன்-
   கலப்பை- பதிப்பகம்- முதற்பதிப்பு -2010 விலை ரூ 130
  
7. அம்பேதகர் வாழ்வும் பாடமும் - சு.அறிவுக்கரசு -
   விஜயா பதிப்பகம்-கோவை ,முதற்பதிப்பு -2011 விலை ரூ65

8. மேடைப்பயணங்கள் - முனைவர் கு.ஞான சம்பந்தன் - 
   அமுதம் பதிப்பகம், முதல் பதிப்பு : ஆகஸ்டு 2011 விலை ரூ 120

9. வாழ்வியல் சிந்தனைகள் - பாகம் 1-to -  பாகம் 8  
    கி.வீரமணி , திராவிடன் புத்தக நிலையம்,சென்னை-7

10.  The 7 Habits of Highly effective people - by Stephen Covey -Publisher : Pocket Books,2004  


முனைவர் வா.நேரு email: pavendar@yahoo.com




Thursday 23 August 2012

பாலகுமாருக்கு பிடித்த (பரிந்துரைக்கும்) நூல்கள்



மதுரை புத்தகத் திருவிழா – 2012 – பரிந்துரை


எதிர்வரும் 30/08/2012 முதல் 09/09/2012 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியில் நண்பர்க்ள் புத்தகங்களை தேர்வு செய்ய ஏதுவாக சில புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு வாசிப்போர் களம்சார்பாக கேட்டனர்.
தரவரிசை என்றெல்லாம் பிரிக்காமல், மனதுக்கு சட்டென தோன்றிய சில புத்தகங்களைப் பற்றி சிறுகுறிப்புடன் அளித்திருக்கிறேன். வேறுபட்ட வாசிப்புத்தளத்தில் உள்ள பல நண்பர்களைக் கொண்டது வாசிப்போர் களம்”. அனைவருக்குமே இனிய வாசிப்பனுவம் தரக்கூடிய நூல்கள் இவை என்ற வகையில் இவற்றைத் தொகுத்திருக்கிறேன்.

வாடிவாசல் / சிசு செல்லப்பா / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.40

மாடணைதல் என்ற தமிழர் வீரவிளையாட்டின் சூட்சமங்களை சொல்லும் நாவல். இரண்டு துடிப்பான மாடுபிடி வீரர்கள் வேற்றூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு வருகிறார்கள். அதில் ஒருவன் தன் தந்தையை குத்திச் சாய்த்த ஒரு காரிகாளையை அடக்கி, இழந்த பெருமையை நிலைநாட்ட எடுக்கும் முயற்சி தான் நாவலின் கரு. நாவல் படிக்கும் போதே, களத்தில் மாடு பிடிக்க நாமும் நிற்பதைப் போன்ற உணர்வு எழும் அளவு தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. 

கோபல்ல கிராமம் / கி.ராஜநாராயணன் / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.100

இது ஒரு இனக்குழுவின் கதை. ஆந்திர தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் செழிப்பாக வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தில் சர்வ லட்சணங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் மானத்தை காக்க வேண்டி ஊர், நிலம் நீச்சு, சொந்தபந்தம், கால்நடை அனைத்தையும் விட்டு பலநாட்கள் பட்டினியோடும், உடல் ரணங்களோடும் தெற்கு நோக்கி பயணப்படுகிறார்கள். வழிநெடுக பல இன்னல்களையும், தெய்வாதீன்மான சில நிகழ்வுகளையும் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மேலும் பயணிக்க முடியாத நிலையில், அங்குள்ள வனப்பகுதியை சீர்திருத்தி விவசாயம் செய்து அந்தப் பகுதியிலேயே தங்கள் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்கிறார்கள் என்று அழகாக விவரிக்கப்பட்டிருக்கும் நாவல்.

துணையெழுத்து / எஸ்.ராமகிருஷ்ணன் / விகடன் பிரசுரம் / ரூ.110

நம்மில் பெரும்பான்மையோருக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகம் ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்த துணையெழுத்துமூலமாகவே நிகழ்ந்திருக்கும். அன்றாடம் நாம் கடந்து செல்லும் முகம் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களை சகபயணியாக உணர்ந்து எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு. தெள்ளிய நீரோடையில் மிதந்து செல்லும் தக்கை போல எளிய மனிதர்களின் மேன்மை பற்றி எதார்த்தமாக பேசும் தொகுப்பு. நாளிதழ்களில் நாம் காணும் உயிர்காக்க உதவுங்கள்அறிவிப்பு கொடுப்பவர்கள், நெடுஞ்சாலை உணவகத்தில் எடுபிடி வேலை செய்பவர், தெருக்கூத்து நடிகர்கள் என பல நிலை மனிதர்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் படைப்பு. 

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் / நேசமித்ரன் / உயிர்மை பதிப்பகம் / ரூ.50

தெளிவான நீரோடை போல சீராக பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று முகத்தில் வீச, மெல்லிய புன்னகை முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம்.  கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை. சொற்களை பகடைகளாக்கி பரமபதம் ஆட வைக்கும் வித்தையை கற்றுத் தரும் இந்தத் தொகுப்பு. நாம் இதுவரை வாசித்த கவிதைத் தொகுப்புகளிலிருந்து இது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். தொடர் வாசிப்பில் சொற்களாலான புதையல் வேட்டையில் புதுப்புது திறப்புகளும், சுடோகு புதிர் அவிழ்க்கும் உற்சாகமும் பிறக்கும்.

சேவல்கட்டு / ம.தவசி / புதுமைப் பித்தன் பதிப்பகம் / ரூ.70


சேவல் சண்டையை மையமாக வைத்து புனைவும், யதார்த்தமும் கலந்து எழுதப்பட்ட நாவல். கொண்ட வைராக்கியத்திற்காக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து அவமானப்பட்டாலும், தான் அடிபட்ட களத்திற்குள்ளேயே சுழன்று தன் வாழ்வையே தொலைக்கிறான் ஒருவன். அவன் விட்ட இடத்திலிருந்து அவனது மகனும் அதே பாதையிலேயே அலைந்து திரிகிறான். போத்தையா என்னும் அறுபது வயது நபரும் அவரது தந்தை சேவுகப்பாண்டியனும் சேவற்கட்டில் தங்கள் வாழ்வை இழந்த கதை, மாயா யதார்த்த நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. கத்திக்கட்டு சேவல் சண்டையின் நுனுக்கங்களும், பண்டைய காலத்தில் பெண்களில் இந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தது பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

விழித்திருப்பவனின் இரவு / எஸ்.ராமகிருஷ்ணன் / உயிர்மை பதிப்பகம் / ரூ.110 

உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய அருமையான அறிமுகம் தரும் கட்டுரைத் தொகுப்பு. தற்கொலையை தவம் போல செய்யும் சாமுராயாகட்டும், வண்னத்துப் பூச்சியை கனவில் காண்பதோ, இல்லை ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவிற்குள் தான் வாழ்வதாக உருவகம் செய்பவராகட்டும், ஒரு வெற்றுக் காகிதத்தை உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக மதிப்பவராகட்டும், காளைச் சண்டையின் நுணுக்கங்களை தேர்ந்த நடனம் போல் ரசிப்பவராகட்டும் அவரவர் வாழ்வை அவரவர் வலிகளோடும், சிலிர்ப்புகளோடும், போதாமைகளோடும், சுக துக்கங்களோடும் நேர்மையாக பதிவு செய்திருக்கும் தொகுப்பு. வெறும் தரவுகளாக இல்லாமல், உலக இலக்கிய ஆளுமைகளின் வாழ்வை கதை போல சொல்லியிருக்கும் கட்டுரைத் தொகுப்பு.

******

வாசிப்பனுபவம் இனிதாகட்டும் நண்பர்களே !

நட்புடன்
வி.பாலகுமார்

Tuesday 21 August 2012

வாசிக்கத்தகுந்த நூல்கள்!


தோழர்களே! "நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்" என்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கு  நல்ல நூல்களை வாசிக்க கற்றுக் கொடுங்கள். பள்ளிக், கல்லூரி புத்தகங்கள் மட்டும் அவர்களது வளமான வாழ்விற்கு போதுமானதல்ல என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். இதோ எனது பரிந்துரையாக  சில நூல்கள்;

1.       இந்திய வரலாற்றில் பகவத்கீதை -(ஆய்வு  நூல்)
விடியல் பதிப்பகம்
               மூலம்: பிரேம்நாத் பசாஸ் ; தமிழில் : கே.சுப்பிரமணியன்
2.       சிக்மண்ட் பிராய்டு-( உளப்பகுப்பாய்வு  அறிவியல்)
அலைகள் வெளியீட்டகம்     -தி.கு.ரவிச்சந்திரன்.
3.       விடுதலைப் போரின் வீர மரபு -கீழைக்காற்று பதிப்பகம்.
4.       1857 - (சுதந்திரப் போராட்ட வரலாறு)
NCBH வெளியீடு,   மூலம்: சுரேந்திரநாத் சென்.தமிழில்: சா.ஜெயராஜ். 
5.       ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்- (அமெரிக்காவின் சதி வலைகள்)-
விடியல் பதிப்பகம். மூலம்: ஜான் பெர்கின்ஸ் ; தமிழில்: முருகவேள்.
6.       மறுபக்கம்-(நாவல்) ; NCBH  வெளியீடு  ; பொன்னீலன்
7.       ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) -காலச்சுவடு ; சுந்தர ராமசாமி.
8.       வீரபாண்டியன் மனைவி ( சரித்திர நாவலின் சிகரம்)
பிரேமா பிரசுரம்; அரு.ராமநாதன்.
9.       புதுமைப்பித்தன் கதைகள் (முழுத்தொகுப்பு) -காலச்சுவடு பதிப்பகம்.
10.    உப பாண்டவம் ( மகாபாரதத்தில் புதிரான செய்திகள்)
விஜயா பதிப்பகம் .எஸ்.ராமகிருஷ்ணன்.  

 ---சு.கருப்பையா.