தேசமே கண்ணீரில் மிதக்கிறது | 7 நாள் துக்கம்
குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார்.
இந்த
இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள்
துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட
தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேகாலய
தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை
நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று
மாலை 6.30 மணி
அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென
மயங்கி விழுந்தார்.
உடனடியாக
அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர
சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால்
அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள்
தெரிவித்தனர்.
மருத்துவமனையின்
இயக்குநர் ஜான் சாலியோ ரயான்தியாங் கூறியபோது, 'நாடித்துடிப்பு
அடங்கிய நிலையில்தான் கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார், மாரடைப்பு
காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது' என்று தெரிவித்தார்.
தகவல்
அறிந்து மேகாலய ஆளுநர் சண்முகநாதன், மாநில தலைமைச்
செயலாளர் வாஜ்ரி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.
பின்னர்
தலைமைச் செயலாளர் வாஜ்ரி நிருபர்களிடம் கூறியபோது, 'அப்துல் கலாமின் உடல்
செவ்வாய்க்கிழமை காலை டெல்லிக்கு கொண்டு செல்லப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய
உள்துறை செயலாளர் கோயலுடன் ஆலோசனை நடத்தி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என்று
தெரிவித்தார்.
அப்துல்
கலாமின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர்
நரேந்திர மோடி, தமிழக
முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல்
கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய
அரசு சார்பில் 7 நாட்கள்
துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கலாமின் மறைவு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. தேசமே கண்ணீர் வடிக்கிறது.
வாழ்க்கை
வரலாறு
தமிழகத்தின்
ராமேஸ்வரம் நகரில் கடந்த 1931 அக்டோபர்
15-ம்
தேதி அப்துல் கலாம் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாபுதீன், தாயார்
ஆஷியம்மா.
ராமேஸ்வரத்தில்
பள்ளிக் கல்வியை முடித்த அவர் மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப்
கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954-ல் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
1955-ம்
ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில்
சேர்ந்தார். அங்கு படித்தபோது விமானியாக வேண்டும் என்று கலாம் ஆசைபட்டார். அதற்கான
தேர்வில் அவர் 9-வது
இடம்பெற் றார். ஆனாலும் விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஏவுகணை
விஞ்ஞானி
சென்னை
எம்.ஐ.டி.யில் உயர் கல்வியை முடித்த அவர் 1960-ம் ஆண்டில் மத்திய
அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக
பணியில் சேர்ந்தார்.
முதலில்
இந்திய ராணுவத் துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) அவர் தனது ஆராய்ச்சி பணிகளைத்
தொடர்ந்தார். அங்கு 1980-ம்
ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட்
மூலம் ரோகினி-1 என்ற
செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற் றினார். அவரது சேவையைப்
பாராட்டி 1981-ல்
பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அடுத்து 1990-ல் பத்ம விபூஷண்
விருதைப் பெற்றார். 1963 முதல்
1983 வரை
இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினரா்.
பின்னர்
1999-ம்
ஆண்டில் பொக்ரான் அணுஆயுத சோதனை யில் கலாம் முக்கிய பங்காற்றினார். இதேபோல அக்னி, பிருத்வி, ஆகாஷ்
உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களில் முக்கிய பணியாற்றி உள்ளார்.
அவரை
கவுரப்படுத்தும் விதமாக 1997-ல்
பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவை தவிர 30-க்கும் மேற்பட்ட
பல்கலைக் கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ஏராளமான
சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள் ளார்.
மக்களின்
குடியரசுத் தலைவர்
கடந்த
2002 ஜூலை
25-ம்
தேதி நாட்டின் 11-வது
குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்றார். 2007 ஜூலை 25-ம்
தேதி வரை அவர் பதவி வகித்தார்.
அவர்
விஞ்ஞானியாக பணியாற் றியபோது இந்தியாவின் ஏவுகணை தந்தை என்றும் குடியரசுத் தலைவராக
இருந்தபோது மக்களின் குடியரசுத் தலைவர் என்றும் போற்றப்பட்டார்.
குடியரசுத்
தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைய
தலைமுறையினருக்காக பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
கலாம்
எழுதிய புத்தகங்கள்
சிறந்த
எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அக்னி சிறகுகள், எழுச்சி
தீபங்கள், அப்புறம்
பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகிய புத்தகங்களை
எழுதியுள்ளார்.
இறுதி
வரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த கலாம் மறைந்தாலும் அவரது எளிமையான வாழ்க்கை, இனிமையான
பேச்சால் இந்திய மக்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நன்றி
: தி இந்து தமிழ் 28/07/2015
இந்தியாவின் மிகச் சிறந்த குடிமகன்களில் ஒருவரான மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு வாசிப்போர்களம் அவரது பாதங்களில் மலர்களைத் தூவி வணங்குகிறது. எம் தேசத்திற்கு நீங்கள் விட்டுச் சென்ற அடையாளங்களை , நாட்டின் இறுதிக் குடிமகன் இருக்கும் வரை நினைவு கொள்வான். எங்கள் நன்றியையும் , இறுதி வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
சு.கருப்பையா.
ஒருங்கிணைப்பாளர்.
நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமத்திலும் கிடைக்கவேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் கூறிய , நகரத்தில் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் கிராமத்து மக்களின் துயரத்தை நினைத்த , சரியான வழிகாட்டுதலும் , உத்வேகமும் கொடுத்தால் நமது மாணவர்கள் சாதிப்பார்கள் , அதற்காகவே எனது வாழ்க்கை என அர்ப்பணித்த அய்யா .அ.பெ. ஜை. அப்துல் கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்.
முனைவர் வா.நேரு.
இந்தியாவின் மிகச் சிறந்த குடிமகன்களில் ஒருவரான மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு வாசிப்போர்களம் அவரது பாதங்களில் மலர்களைத் தூவி வணங்குகிறது. எம் தேசத்திற்கு நீங்கள் விட்டுச் சென்ற அடையாளங்களை , நாட்டின் இறுதிக் குடிமகன் இருக்கும் வரை நினைவு கொள்வான். எங்கள் நன்றியையும் , இறுதி வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
சு.கருப்பையா.
ஒருங்கிணைப்பாளர்.
நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமத்திலும் கிடைக்கவேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் கூறிய , நகரத்தில் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் கிராமத்து மக்களின் துயரத்தை நினைத்த , சரியான வழிகாட்டுதலும் , உத்வேகமும் கொடுத்தால் நமது மாணவர்கள் சாதிப்பார்கள் , அதற்காகவே எனது வாழ்க்கை என அர்ப்பணித்த அய்யா .அ.பெ. ஜை. அப்துல் கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்.
முனைவர் வா.நேரு.
Tweet | |||||