Tuesday 13 November 2012

அமைப்பு விவாதம்



தோழர்களே ! வாசிப்போர்களத்தின் ஏழாவது கூட்டம் 10/11/2012  ந் தேதி , புத்தக அறிமுகமும் , விவாதமும் இல்லாமல் ஒரு பொதுக்குழுக்  கூட்டமாக  நடைபெற்றது. தோழர்கள் சங்கையா , நேரு , சௌந்தர் மற்றும் தெய்வேந்திரன்  ஆகியோர்கள் நல்ல கருத்துக்களை பகிர்ந்து  கொண்டார்கள் . இறுதியாக கீழ் காணும் முடிவுகளை செயல் படுத்துவது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

1. வாசிப்போர்களத்தின்  உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

2. இங்கே அணைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிய  நூல்கள் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை      
    பரப்ப வேண்டும்.

3. பொருள்முதவாத , பகுத்தறிவு மற்றும் இடதுசாரி தோழர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்களாக  
   இருப்பார்களோ என்ற எண்ணம் உருவாகி இருந்தால் அதை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

4. இந்தக் களம் , குறுகிய எண்ணம் கொண்ட சாதீய கோட்பாடு நீங்கலான பிற கருத்துக்களை உள்ளடக்கிய
    அணைத்து தோழர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு தளம் என்பதை உணர்த்தவேண்டும் .

அடுத்த கூட்டத்தில் புதிய நூல்களை தோழர்கள் அருணாசலம் மற்றும் தெய்வேந்திரன் ஆகியோர்கள் அறிமுகம் செய்வார்கள்.

No comments:

Post a Comment