Friday 22 February 2013

“கோபல்ல கிராமம்” நாவல் பற்றி...

கி.ராஜநாராயணன் அவர்களின் “கோபல்ல கிராமம்” பற்றி திருமதி.ஜெயந்தி அவர்களின் வாசிப்பனுபவம்.

இந்த புத்தகத்தைப் படிக்கும் பொழுது, சுமார் 70 வருடங்களுக்கு முன் இருந்த நம் இந்திய கிராமத்திற்கு, ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 10 நாட்கள் தங்கி, கிராமத்து சூழலை அனுபவித்த அருமையான உணர்வு ஏற்பட்டது.

மற்றபடி, அதிக ஆசை அழிவுக்குக் காரணமாகிவிடும் என்பதையும், பெண்களைப் போற்றி, பாதுகாத்த எந்தக் குடும்பமும் எப்பொழுதும் உயர்ந்தே இருக்கும் என்பதையும், உழைப்பே உயர்வைத் தரும் என்பதையும், இக்கட்டான நேரத்தில் கூட நல்ல எண்ணம் நற்பண்பு மனிதனுள் இருக்க இயற்கையும், இறையும் துணை புரியும் என்ற பல கருத்துகள் மிகுந்த இந்த நாவலைப் படித்து உணர இனிமையாக இருந்தது.

புத்தக விவரம்: கோபல்ல கிராமம் / கி.ராஜநாராயணன் / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.100

No comments:

Post a Comment