Wednesday 31 December 2014

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Monday 29 December 2014

நியூ செஞ்சுரி புக்ஹவுஸில் தள்ளுபடியில் புத்தக விற்பனை

புத்தாண்டுக்காக விடிய விடிய தள்ளுபடியில் புத்தக விற்பனை
By மதுரை
First Published : 30 December 2014 04:19 AM IST

மதுரையில் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ம் தேதி (புதன்கிழமை) விடிய விடிய நியூ செஞ்சுரி புக்ஹவுஸில் தள்ளுபடியில் புத்தக விற்பனை நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை மேலக்கோபுரத் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் நிறுவன மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புத்தாண்டை முன்னிட்டு மதுரை நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் சார்பில் டிசம்பர் 31-ம் தேதி இரவு சிறப்புத் தள்ளுபடியில் விடிய விடிய புத்தகங்கள் விற்கப்படவுள்ளன.
புத்தகங்கள் 200 தலைப்புகளில் 10 சதம் முதல் 90 சதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படும். சாகித்ய அகாதெமி விருது பெற்ற தோல் நாவல் ரூ.400 என்பது ரூ.280-க்கும் கம்பராமாயணம் (8 நூல்கள்) ரூ.5500 என்பது ரூ.4000 -க்கும் விற்கப்படும். போரும் வாழ்வும் புத்தகம் ரூ.1650 க்குப் பதில் ரூ.1200க்கும், மெகா டிக்ஸ்னரி ரூ.200-க்கும் விற்கப்படும். மத்திய அரசு நிறுவனமான தேசிய புத்தக நிறுவனம், சாகித்ய அகாதெமி பதிப்பக நூல்களுக்கு தலா 20 சதமும், உலக சுகாதார நிறுவன நூல்களுக்கு 60 சதமும், ருஷ்ய மற்றும் சீன பதிப்புகளுக்கு 50 சதமும் தள்ளுபடி வழங்கப்படும்.

வெ.இறையன்பு, கார்த்திகேசு சிவத்தம்பி நூல்களுக்கு 25 சதமும், மொழி பெயர்ப்பு நூல்களுக்கு 30 சதமும் தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.