Saturday 5 April 2014

காவல் கோட்டம்-என்ன நடக்கிறது?

நண்பர்களே!

உங்களுக்கெல்லாம் தெரியும். சு. வேங்கடசனின் "காவல் கோட்டம்"  நாவல்  சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல். தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. வெளியீட்டு விலை ரூ.650 /-ஆக இருந்தது.

ஆனால் , இதே காவல் கோட்டத்தை விகடன் பிரசுரம் ரூ. 520 இக்கு வெளியிட்டது ( பிரசுர எண் 782) . எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது!.

எப்படி?.

இப்பொழுது எனக்கு திரும்பவும் அதிர்ச்சி!. ஆம். தமிழினி பதிப்பகம்  காவல் கோட்டத்தை   மறுபடியும் ரூ.350 இக்கு வெளியிட்டுள்ளது.


ஏன் இந்த நிலை? . போட்டியா? அல்லது குளறுபடியா? . யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.