Saturday 30 November 2013

வருத்தம்!

தோழர்களே!

இந்த மாதம் ( நவம்பர்) வாசிப்போர்களத்தின்  புத்தக அறிமுக கூட்டம் நடத்த இயலவில்லை என்ற வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ( அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட  நூல் " ஏசு கதைகள்" பற்றிய  கருத்துரையும் நிலுவையில் உள்ளது).  நமது உறுப்பினர்களின் பல்வேறு வேலை பளு மற்றும்  எனது வெளி மாநிலப் பயணம் போன்ற காரணங்கள் இருந்தாலும் , கூட்டத்தை நடத்தாதது குறையாகவே தெரிகிறது. இதை ஈடுகட்டும் விதமாக வருகிற 14/12/2013 ந் தேதி நடைபெற இருக்கும் கூட்டம் திகழும் என்று கருதுகிறேன். டிசம்பர் மாதக் கூட்டம் திட்டமிட்டவாறு நடக்கும்.  நல்ல நூலுக்காக உங்களைப் போல் நானும் காத்திருக்கிறேன்.விரைவில் சந்திப்போம்.

வாசிப்போர்களத்துக்காக

------------சு.கருப்பையா.

No comments:

Post a Comment